18:47
0

மனிதர்களுக்கு ஐந்து புலன் அறிவுகள் மட்டுமே உண்டு. ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு.

சில உயிரினங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு அறிவாக உணர்திறன் அதிகமாக இருக்கும். பல பாலூட்டி உயிரினங்களுக்கு பார்வையை விட மோப்பத்திறன் அதிகமாக இருக்கும். ஆனால், அதுவே மனிதர்களுக்கு முகரும் திறன் குறைவு.

விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

மனிதர்களுக்கு பகுத்தறிவை விடுத்து, மற்ற புலனறிவுகள் ஐந்து என்பது மரபான நம்பிக்கை. ஆனால், நம்முடைய புலனறிவுகள் ஐந்தோடு நின்று விடவில்லை என்று நவீன கால விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நம்முடைய அறிவு அதாவது உணர்ச்சிகளை அறியும் திறனை எப்படி வகைப்படுத்தினாலும், ஐந்து அறிவுகளை விட அதிகமாகவே நமக்கு உள்ளது என்பது தான் அறிவியல் பூர்வமான உண்மை என்று கூறுகின்றனர்.

மனிதர்களுக்கு உள்ள உணர்திறன் அறிவுகள்?

மனிதர்களுக்கு மரபு சாராமல் இருக்கும் உணர்திறன்கள் என்று எடுத்துக் கொண்டால் அது,

வலியை உணரும் தன்மை (nociception).
வெப்பத்தை உணரும் தன்மை (thermoception).
நகரும் மற்றும் நடக்கும் போதும் உடலைச் சமநிலையில் வைத்திருக்கும் தன்மை (equilibrioception).
மனிதர்களுக்கு உள்ள உணர்வு திறன் விலங்கினத்திற்கு உண்டா?

மரபாக வகுக்கப்பட்ட அறிவுத் துறைகளை வைத்து பார்க்கும் போது, மனிதர்களைப் போலவே உயிரினங்களுக்கும் அதிகமாக உள்ளது.

பறவைகள் மற்றும் கடல் வாழ் உயிரனங்களுக்கு மின்காந்தப்புலம், நீர் அழுத்தம், நீரோட்டம் போன்றவற்றை உணரும் அறிவு உள்ளது. ஆனால் இந்த அறிவுகள் எதுவுமே மனிதர்களுக்குக் கிடையாது.

மனிதர்கள் முதல் உயிரினங்களுக்கு உள்ள அறிவுகள்?

  • மரம் - மரத்திற்கு ஓரறிவு தான் உள்ளது. அதுதான் தொடுதல்.
  • நத்தை - நத்தைக்கு இரண்டறிவு உள்ளது. அது தொடுதல் மற்றும் சுவை.
  • எறும்பு - எறும்புகளுக்கு மூன்று அறிவு உள்ளது. அது தொடுதல், சுவை மற்றும் முகர்தல்.
  • தேனீ - தேனீக்களுக்கு நான்கு அறிவு உள்ளது. அது தொடுதல், சுவை, முகர்தல் மற்றும் பார்வை.
  • பாலூட்டிகள் - பாலூட்டி உயிரினங்களுக்கு ஐந்து அறிவு உள்ளது. அது தொடுதல், சுவை, முகர்தல், பார்வை மற்றும் கேட்டல்.
  • மனிதர்கள் - மனிதர்களுக்கு ஆறாவது அறிவாக பகுத்தறிவு உள்ளது.

0 comments:

Post a Comment