07:50
0
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு , அரச நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் , புலமைப் பரிசில் பரீட்சையை தரம் 7 அல்லது தரம் 8 ற்கு மாற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர் . 


 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் சர்வதேச சிறுவர் தினமன்று வெளியிடப்பட்ட காரணத்தினால் , சிறுவர்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . 

 இது தொடர்பான விசாரணைகளில் பங்கேற்ற அரசாங்க அதிகாரிகள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர் . புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களை தரம் மூன்றிலிருந்து ஆயத்தப்படுத்துவதனால் சிறுவர்கள் உளவியல் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

0 comments:

Post a Comment