21:30
0

சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கு கடலின் ஆழமான பகுதியில் ஏற்படும் ஒலி அலைகள் காரணமாக இருக்க வாய்ப்புண்டு என பிரித்தானியாவின் கார்டிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியல் மேதை உசாமா கட்ரி தெரிவித்துள்ளார்.

உலகில் அண்மை காலங்களாக பல இடங்களில் பூகம்பங்கள், சுனாமி மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவை நடந்து கொண்டு வருகின்றன. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவின் கார்டிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் உசாமா கட்ரி இது போன்ற பேரழிவு குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கு கடலின் ஆழமான பகுதியில் ஏற்படும் ஒலி அலைகள் ஒன்று சேர்ந்து வெடித்துச் சிதறுவதாலே இது போன்ற செயல்கள் ஏற்படுவதாக கூறியுள்ளார்.

பொதுவாக கடலின் மேற்பரப்பில் ஒலி அலைகள் எழுப்பும். அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து பூமியின் கீழே ஆயிரக்கணக்கான மீற்றர் அளவு சென்று ஒன்றாக சேர்ந்து அவை எழும்பும் போது பூமியில் பூகம்பம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு சுனாமியாக மாறுகின்றன என கூறியுள்ளார்.

இது தொடர்பாக செயற்கையாக செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் ஒலி ஈர்ப்பு அலைகளை ஒன்று திரட்டி அவை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் போது சுனாமி முற்றிலும் கலைக்கப்பட்டுவிடுவதாக கூறியுள்ளார்.

கடந்த இருபது வருடங்களில் மட்டும் மில்லியன் கணக்கான உயிர்கள் சுனாமி போன்ற பேரழிவுகளால் இழந்திருப்பதாகவும், இதனால் சுற்றுப்புறச்சுழல் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், உலக நிதி நெருக்கடி போன்றவை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது வரை சுனாமியை எதிர்கொள்வதற்கு எந்த ஒரு முகாந்தரமும் இல்லை. இதனால் ஒலி ஈர்ப்பு அலைகளைப் பயன்படுத்தி சுனாமி தொடர்பான பேரழிவுகளை எப்படி எதிர்கொள்வது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளில் 9 மோசமான பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 14 நாடுகளில் 2,30,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பூகம்பம் மற்றும் சுனாமி என்பது ஹிரோசிமாவை அழிக்க பயன்படுத்திய அணு குண்டை விடவும் 1500 மடங்கு ஆற்றல் உடையது எனவும் கூறப்படுகிறது.


0 comments:

Post a Comment