19:50
0

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல.

இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே பிறக்கும் என்று சொல்ல முடியாது.

அது கருமுட்டை மற்றும் விந்துவை பொறுத்ததுடன், பெண்ணின் பரம்பரையில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தாலும் இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

கருவுருதலின் போது ஆண்களிடமிருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து செல்களில், ஒரு விந்து செல் மட்டும் பெண்களின் கருப்பையில் உள்ள அண்ட செல்லுடன் இணைந்து கருமுட்டை உருவாகும்.

இவ்வாறு ஆண், பெண் இணைந்த கரு முட்டை இரண்டு இரண்டாக பிரிந்து ஆயிரக்கணக்கான செல்கள் கொண்ட கரு முட்டைகளாக மாறுகின்றன, இதை மொருலா என்று கூறுவார்கள்.

மேலும் இந்த மொருலா வளர்ச்சி அடைந்தப் பின் அதன் குறிப்பிட்ட பகுதிகள் குழந்தைகளின் உடலுறுப்பாக மாறுகின்றன.

மொருலாவானது, அதன் வளர்ச்சிக்கு முன் இரண்டாக பிரிந்தால், பிரிந்த இரண்டு மொருலாவும் இரண்டு குழந்தைகளின் உடலாக மாற்றம் பெற்றால் அப்போது இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன.

0 comments:

Post a Comment