08:38
0

உலகத் தரம் வாய்ந்த இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து சந்தைப்படுத்தும் Panasonic நிறுவனம் தற்போது மற்றுமொரு தொழில்நுட்ப புரட்சியை செய்துள்ளது.

அதாவது செயற்படாத நிலையில் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டியை வடிவமைத்துள்ளது.

இத்தொலைக்காட்சிப் பெட்டியானது முற்றிலும் ஒளியினை ஊடுபுகவிடக்கூடிய கண்ணாடியைப் போன்றே காணப்படும்.

காட்சிகள் புலப்படும்போது மட்டுமே இது ஒரு தொலைக்காட்சிப் பெட்டி என்று அறியக்கூடியதாக இருக்கும்.

தற்போது காணப்படும் LED தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான OLED திரையினைக் கொண்டே இந்த தொலைக்காட்சிப் பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது முற்றுமுழுதாக மேம்படுத்தப்படுவதற்கு இன்னும் மூன்றாண்டு காலம் அல்லது அதற்கு மேல் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த தொலைக்காட்சிப் பெட்டி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

0 comments:

Post a Comment