18:17
0

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா.

இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான்.

இந்த குட்டித்தீவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 11 ஆகும்.

இந்த தீவின் அரசர் பர்த்லியோனி, இந்த தீவில் உள்ள ஒரே ஒரு உணவு விடுதியை இவரே நடத்தி வருகிறார்.

மேலும் இந்த தீவுக்கு வரும் சுற்றுலாபயணிகளுக்கும் படகு சவாரி ஓட்டுபவரும் இவரே.

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல் தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது.

அன்றுமுதல் இன்றுவரை இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.

இந்த தீவில் இருக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் கழுகு இனத்தையும் பார்ப்பதற்காகவே பெரும்பாலான மக்கள் இங்கு படையெடுக்கின்றனர்.

சிறிய நாடாக இருந்தாலும் எங்கள் முன் விரிந்திருக்கும் மிகப்பெரிய கடல் சாம்ராஜ்ஜியத்தின் கோட்டையாக தவோலாரா திகழ்கிறது என்று கூறுகிறார் இந்நாட்டின் அரசர் பர்த்லியோனி.




0 comments:

Post a Comment