21:56
0

சம காலத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக பல்வேறு செயற்பாடுகளையும் குறித்த ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஊடாக இலகுவாக செய்து முடிக்கக்கூடியவாறு இருத்தலே ஆகும்.

எனினும் இவை கொண்டுள்ள அதிக வசதி காரணமாக அவற்றில் இணைக்கப்பட்டுள்ள மின்கலங்கள் நீண்ட நேரத்திற்கு மின்னை வழங்க முடியாமல் இருக்கின்றது.

இதனை தவிர்ப்பதற்கு பவர் பேங்க், சோலார் கவர்கள் என்பன உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றின் வரிசையில் தற்போது சோலார் டேப்லட் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக 9,000 mAh மின்கலங்கள் வரை சார்ஜ் செய்ய முடியும்.

தற்போது Indiegogo இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 30 நாட்களில் விற்பனைக்கு வரவுள்ள இச் சாதனத்தினை 59 டொலர்கள் பெறுமதியில் ஒன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கு டெலிவரி எடுக்க முடியும்.

0 comments:

Post a Comment